வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 8
அவங்க முன்னாடி குதிச்ச அந்த உருவம் உதய் தானு தமிழ், அஞ்சலிக்கு தெரியும்ங்குறதால அமைதியா இருந்தாங்க... ஏன்னா உதய் இப்படி தான் நிறைய சேட்டை பண்ணுவான்...😜😜😜
ஆனா மிரு, அர்ஜுன் தான் பயந்துட்டாங்க...😟😟
மிருனாழினி : பயத்துல கையால முகத்தை மூடிகிட்டா...🙈
அர்ஜுன் : "பயந்து பின்னாடி போறனு கால் இடறி பின்பக்கம் வயல்க்கு தண்ணி போற வாய்க்கால்ல தொப்புனு விழுந்தான்..." ⛲
"அவன் விழுந்த வேகத்துக்கு தண்ணி எல்லார் மேலையும் அடிச்சது..." ⛲💦
மிருனாழினி : "தண்ணி படவும் கைய எடுத்துட்டு பார்த்தா அர்ஜுன் வாய்க்கால்ல விழுந்து கிடந்தான்..." 🏊
அர்ஜுன் : அது குட்டி வாய்க்கால்லா இருந்தாலும் தண்ணி வேகமா போறதால அவனையும் சேர்த்து இழுத்துட்டு போறா மாதிரி தோன கை, கால ஆட்டிகிட்டு காப்பாத்துங்க காப்பாத்துங்கனு கத்த ஆரம்பிச்சிட்டான்...😟
உதய் : யார் டா இவன் தவளைய மல்லாக்க போட்டா மாதிரி கை, கால போட்டு உதறிட்டு இருக்கான்...🤔
உதய் இப்படி சொல்லவும் மூனு பேரும் அர்ஜுனை பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க...😂😂😂
மிருனாழினி : 😂 டேய் அர்ஜுன் எரும அது வெறும் வாய்க்கால் தண்ணி தான் அதுக்கு ஏன் இப்படி கத்துற எழுந்திரி...😅
அர்ஜுன் : அடியே எழுந்திரிக்க முடியல டி...
தமிழ், உதய்யும் அவன் கைய புடிச்சி தூக்கி விட்டாங்க...🤝
அர்ஜுன் : ஏங்க இப்படி மரத்துல இருந்து குரங்கு மாதிரி குதிச்சி பயமுறுத்துறீங்க...😑
உதய் : நான் எப்போதும் அப்படி தான் பண்ணுவேன் நீ பயந்து விழுந்தா நான் என்ன பண்ணுவேன்...😑
அர்ஜுன் : 😒😒😒 தமிழ் ட்ரெஸ் எல்லாம் சேர் ஆகிடுச்சி...
தமிழ்மாறன் : போய் மோட்டார்ல கழுவிட்டு வா...
மிருனாழினி : நானும் போய் ஹெல்ப் பண்ணுறேன்...
உதய் : டேய் யார் இவங்க இரண்டு பேரும்...🤔
தமிழ்மாறன் : அந்த பொண்ணு அஞ்சலி ஃப்ரண்டு அந்த பையன் அவளோட அண்ணன்...
உதய் : "அப்போ தான் அங்க அஞ்சலிய பார்த்தான்...." 🧐
அஞ்சலி : "இடுப்புல கைய வச்சிட்டு அவனை பார்த்து முறைச்சா..." 😠😠😠
உதய் : ஹேய் பாப்பா என்னடா இவ்ளோ பாசமா பார்க்குற...😁
அஞ்சலி : பாசமா பார்க்கல எரும முறைக்குறேன் ( சொல்லிட்டே அவனை போட்டு அடிச்சா)
உதய் : ஆஆஆ வலிக்குது பாப்பா அடிக்காத ( நின்ன இடத்துலயே துள்ளுனான்)
அஞ்சலி : ஃபோன் பண்ணா எடுக்க மாட்ற நீயும் கால் பண்ண மாட்ற அவ்ளோ கொழுப்பா உனக்கு...🤨
உதய் : "அந்த மேனேஜர் சொட்ட நிறைய வேலை குடுக்குறான் பாப்பா நான் என்ன பண்ணுறது..." ☹️
அஞ்சலி : காரணம் சொல்லாத டா எரும...😏
தமிழ்மாறன் : "பாப்பா மறியாதையா பேசு..."
அஞ்சலி : "இல்ல அண்ணா இவன் விஷயத்துல நான் உன் பேச்சை கேட்கவே மாட்டேன்..." 😏
தமிழ்மாறன் : "எப்படியோ போங்க..."
உதய் : "டேய் மச்சான் காப்பாத்து டா..."
தமிழ்மாறன் : "போ டா நீயாச்சும் அவளாச்சும்..." 😑
அஞ்சலி : ( அவன் சட்டைய புடிச்சி இழுத்தா) இனிமேல் நான் கால் பண்ணா பேசனும் சரியா...🤨
உதய் : சரி சரி பேசுறேன்...
அஞ்சலி : _ம்ம்ம் அது..."
அர்ஜுன், மிருனாழினி : "அவங்க கிட்ட வந்தாங்க..." 🚶🏻♀️🚶🏻♂️
தமிழ்மாறன் : "நான் இப்போ சொன்னேன என் ஃப்ரண்ட் உதய் அது இவன் தான்..."
அர்ஜுன், மிருனாழினி : ஹாய்...🙋🏻♂️
உதய் : "ஹாய்... எங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா..." 🧐
தமிழ்மாறன் : "இவங்க தான்டா வீட்டுக்கு போறாங்க... வயல்ல களை எடுக்குறாங்க நான் இங்க தான் இருப்பேன்..."
உதய் : "அவங்க எடுக்கட்டும் தமிழ் நீ இவங்களை அழைச்சிட்டு வா நம்ம வீட்டுக்கு போய்ட்டு வந்துடலாம்..."
தமிழ்மாறன் : "இவங்களை அழைச்சிட்டு போடா நான் அப்பறம் வரேன்..."
உதய் : இந்த கதையே வேண்டா வா என் கூட ( அவன் தோள்ல கைய போட்டு அழைச்சிட்டு போனான்)
பாப்பா அவங்களை அழைச்சிட்டு வா டா...
அஞ்சலி : "வாங்க உதய் வீட்டுக்கு பின்னாடி ஆறு இருக்கும் செம்மயா இருக்கும்..." 🌊
இவங்க மூனு பேரும் பின்னாடி போனாங்க...🚶🏻♀️🚶🏻♂️🚶🏻♀️
உதய் : "டேய் தமிழு என்னடா நடக்குது இங்க..."
தமிழ்மாறன் : "நீ நடக்குற நான் நடக்குறேன் பின்னாடி மூனு பேர் நடந்து வராங்க..."
உதய் : டேய் என்ன கிண்டலா...
தமிழ்மாறன் : நீ தான டா கேட்ட...
உதய் : எந்த பொண்ணு கூடவும் பேச மாட்ட நம்ம பாப்பா வோட ஃப்ரண்டு கிட்ட மட்டும் ரொம்ப க்ளோஸ்ஸா பழகுறா மாதிரி தெரியுது...🤔
தமிழ்மாறன் : ச்ச மச்சான் அப்படிலாம் இல்ல டா பாப்பா சென்னைல இருந்து வரும் போது அவ ஃப்ரண்ட அழைச்சிட்டு வரதா சொன்னா...
நான் அதெல்லாம் சரிபட்டு வராது வேண்டானு சொன்னேன் அதுக்கு பாப்பா அவ அப்பா, அம்மா எப்போதும் பிஸ்னஸ்னு போய்டுவாங்க இவ தனியா இருக்கிறதால ரொம்ப மனஉலைச்சல்ல இருக்கா நம்ம ஊருக்கு வந்தா கொஞ்சம் சந்தோஷமா இருப்பா ப்ளீஸ் அண்ணானு கெஞ்சுனா...
அதான் நானும் அழைச்சிட்டு வர சொன்னேன்... இருக்க போறது ஒரு மாசம் தான் அதுவரை சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்...
அந்த பொண்ணும் பால் கறக்குறது வயல் வேலை பத்திலாம் கேட்டுதா சரினு நானும் கொஞ்சம் நல்லா பேசி சொல்லி தரேன்...
உதய் : ஓஓஓ இதான் நடந்துதா நான் கூட என்ன டா அதிசயமா ஒரு பொண்ணு கூட நல்லா பேசுறியேனு நினைச்சேன்...🤔
தமிழ்மாறன் : ஏன்டா நான் என்ன அவ்ளோ கொடுறமாவா மத்த பொண்ணுங்கள்ட நடந்துக்குறேன்...🧐
உதய் : "பின்ன இல்லயா நீ மீசைய முறுக்கி ஒரு பார்வை பார்த்தா போதும் பொண்ணுங்க எல்லாம் பயந்து ஓடிடுவாங்க..."
தமிழ்மாறன் : "அட போ டா..." 😏
பேசிட்டே உதய் வீட்டுக்கு வந்துட்டாங்க...🏡
வீட்டுக்கு வந்தது அஞ்சலி அத்தை அத்தைனு கத்திட்டே வீட்டுக்குள்ள ஓடிட்டா அவ கூட வந்த அர்ஜுனும், மிருனாழினியும் என்ன பண்ணுறதுனு தெரியாம அப்படியே நின்னுட்டாங்க...
உதய் : "ஏன் அங்கயே நிக்குறிங்க உள்ள வாங்க..."
தமிழ்மாறன் : "அர்ஜுன் வா டா யாழினி நீயும் வா..."
நாலு பேரும் உள்ள வந்தாங்க...
அஞ்சலி : "உதய் அம்மா மடில படுத்து அவங்கள்ட பேசிட்டு இருந்தா..."
சீதா ( உதய் அம்மா) : "டேய் உதய் அஞ்சலி வந்துருக்கா பாரு..."
உதய் : "எங்க கூட தான் மா வந்தா அவ ஃப்ரண்ட வெளிலயே விட்டுட்டு உள்ள ஓடி வந்துட்டா..."
அஞ்சலி : அச்சோ ( தலைல அடிச்சிட்டு போய் மிருவ அழைச்சிட்டு வந்தா) அத்தை இவ தான் மிருனாழினி என் ஃப்ரண்ட்...
சீதா : ₹வா மா மிருனாழினி அஞ்சலி உன்னை பத்தி நிறைய சொல்லிருக்கா... வா வந்து உட்காரு..."
மிருனாழினி : வணக்கம் மா இவன் என் அண்ணன் அர்ஜுன்...
அர்ஜுன் : வணக்கம் மா...🙏🏻
சீதா : வணக்கம் பா வா வந்து உட்காரு...
அர்ஜுன் : "மிரு பக்கத்துல உட்கார்ந்தான்..."
சீதா : நீங்களும் உட்காருங்க டா ஏன் நிக்குறிங்க...
தமிழ்மாறன் : அத்தை காலைல மளிகை சாமான் வந்துதா இல்லயா...🤔
சீதா : "வந்துடுச்சி டா எல்லாம் சரியா இருக்கு..."
( உதய்க்கு அப்பா இல்ல அவன் கோயம்பத்தூர்ல வேலை பார்க்குறதால சீதாவை கவனிச்சிக்குறது எல்லாமே தமிழ் தான்... அவன் தான் அந்த வீட்டுக்கு தேவையான மளிகை சாமான், அரிசி, காய்கறி எல்லாத்தையும் மாசா மாசம் இவங்க வீட்டுக்கு அனுப்பி வைப்பான்)
சீதா : "நீங்க பேசிட்டு இருங்க நான் போய் எல்லாருக்கும் மோர் எடுத்துட்டு வரேன்..."
அஞ்சலி : நானும் வரேன் அத்தை ( அவங்க கூட ஓடிட்டா )
எல்லாரும் மோர் குடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க...
தொடரும்...
# Sandhiya.

7 Comments
Arjun nalla ellar munnadiyum avamana pattutan😂 paavam paiyan athula vilunthutu kapathunganu kathuran 😂 ore siripa pochu udhay vantha udane tamizh behavior changes kandupidichitan
ReplyDeleteThank you
DeletePayanthu poyi intha arjun ippadiya pannuvan 😅😅😅😅😅miru va paththi yallaam theriunju than pesuran Pola Tamil ❤️❤️
ReplyDeleteசூப்பர் ஸ்டோரி ரொம்ப சுவாரஸ்யமா போகுது
ReplyDeleteThank you
DeleteSeriyana loosu🤣🤣🤣🤣🤣🤣arju paithyam
ReplyDelete😂😂😂
Delete