என் இதயத்தில் நீ - 31

ஈவ்னிங்,

ஸ்னேகா வீடு,

"ஸ்னேகா ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் ஃப்ரஸ் ஆகிட்டு ஹால்ல வந்து உட்கார்ந்தாள்..."

பரதன் : "கிரிக்கெட் பேட்,பந்து  எடுத்துட்டு இருந்தான்..." ஸ்னேகாவ பார்த்ததும் அஸ்வின் ஸ்னேகா கிட்ட நாவல் புக் குடுக்க சொன்ன ‌நியாபகம் வந்ததால அவள்ட நாவல் புக்கை குடுத்துட்டு விளையாட போய்ட்டான்..."

ஸ்னேகா : 😍 "அந்த நாவல் புக்கை பார்த்துட்டு ரொம்ப சந்தோசம்..."

"ஸ்னேகா மொபைலை எடுத்து மாடிக்கு சென்றாள்..."

"ஸ்னேகா காலிங் அஸ்வின்..." 📲

அஸ்வின் : ( கிரிக்கெட் விளையாட க்ரவுன்ட்க்கு பைக்ல போய் கொண்டு இருந்தான் ) ஸ்னேகா கால் பண்ணவும்  பைக்கை ஸ்டாப் பண்ணி ஹலோ...

ஸ்னேகா : ஹலோ...

அஸ்வின் : ஹலோ ஸ்னேகா நீயா பேசுறது ?

ஸ்னேகா : "ஆமா நான் தான்..."

அஸ்வின் :  "அதிசயமா இருக்கு கால்லா பண்ணி இருக்க..."

ஸ்னேகா : ஏன் பண்ண கூடாதா?

அஸ்வின் : தாராளமா பண்ணலாம்...

ஸ்னேகா : ம்ம்ம்..

அஸ்வின் : எங்க இருக்க ?

ஸ்னேகா : வீட்டு மொட்டை மாடியில இருக்க‌... நீங்க எங்க இருக்கீங்க ?

அஸ்வின் : க்ரவுண்டுல...

ஸ்னேகா : ம்ம்ம்... அண்ணிக்கு வளைகாப்பு எல்லா எப்படி நடந்தது ?

அஸ்வின் : "ரொம்ப சிறப்பா நடந்து முடிச்சிட்டு... நீ வராதது தான் ஒரே குறையே..."

ஸ்னேகா : சாரி... நானும் வந்திருக்கலாம் அந்த மிஸ் பேச்ச கேட்டதால தான் வரல...

அஸ்வின் : க்ளாஸ்ல எல்லாரும் வந்தாங்களா?

ஸ்னேகா : இல்லையே...7 பேரு ஆப்ஷன்ட்...

அஸ்வின் : நான் அப்பவே சொன்னல...

ஸ்னேகா : சரி க்ளாஸ் பத்தி பேச வேண்டா எனக்கு டென்ஷன் தான் ஆகுது....

அஸ்வின் : ம்ம்ம்...சரி.

ஸ்னேகா : நான் படிக்கனும் ரொம்ப எதிர் பார்த்துட்டு இருத்த நாவல் குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...

அஸ்வின் : பரவால இருக்கட்டும்...

ஸ்னேகா : இந்த " பொன்னியின் செல்வன்"  நாவல் தான் படமா வர போகுதாம்...

அஸ்வின் : ஆமா, தெரியும்...இதுல மொத்தம் 5 பாகம் இருக்கு உன் கிட்ட குடுத்தது ஃபர்ஸ்ட் பாகம் மட்டும் தான்...

ஸ்னேகா : ஓஓஓ... ஓகே.

அஸ்வின் : நீ இந்த நாவலை படிச்சதும் சொல்லு உனக்கு இரண்டாவது பாகத்தோட நாவல் புக்கை தரேன்...

ஸ்னேகா : ம்ம்ம்...சரி.
சாப்டிங்களா?

அஸ்வின் : இந்த டைம்லயா?

ஸ்னேகா : இல்ல மதியம் கேட்டேன்....

அஸ்வின் : ம்ம்ம்...சாப்டனே... பொங்கல்,புளிசாதம்,லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், லட்டு, கூட்டு பொரியல் எல்லாமே சாப்டேன்...

ஸ்னேகா : நீங்க மட்டும் சாப்டா போதுமா.... நான் தான் வரல எனக்காக பார்சல் கட்டி  எங்க அம்மாட்ட குடுத்து அனுப்பனும்னு கூட தெரியாதா உங்களுக்கு...

அஸ்வின் : நீ தான் வரல அது உன்னோட தப்பு... நாங்க ஏன் குடுத்து அனுப்பனும் ..

ஸ்னேகா : ஓஓ...

அஸ்வின் : 😅😅😅 கோச்சிக்கிட்டியா...

ஸ்னேகா : "இல்லையே..."😏

அஸ்வின் : "எங்க அம்மா நீ உங்க அம்மா இப்படி கேட்பியோ என்னோ தெரியல ஆனா,நீ சாப்டுவனு எல்லாத்தை பார்சல் பண்ணி உங்க அம்மா கிட்ட குடுத்தாங்க...கிட்சன்ல போய் பாரு எல்லாமே இருக்கும்..."

ஸ்னேகா : அப்படியா ? "சரி போய் பார்க்குறேன்..."

அஸ்வின் : ம்ம்ம்...

"இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசி முடிச்சிட்டு கால் கட் பண்ணிட்டாங்க..."

தொடரும்...

# Ram krs