ரணமாய் - 6

தலையை சொரிந்து கொண்டே வந்து அமர்ந்தான் பிரதீப்...

அழுது தீர்த்து சோர்ந்து போய் தாரணி தோளில் சாய்ந்திருந்தாள் சாரு...

சாருவையே பார்த்து கொண்டு இருந்தான் எதார்த்தமாக தாரணியை பார்க்க...

தாரணி கண் இமைக்காமல் அவனையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்...

"அய்யோ இவ என்ன நம்மள இப்படி பாக்குறா... என்ன பண்றது..."என்று யோசித்து கொண்டு "coffee குடிக்கலாமா..."என்று கேட்க...

தாரணி அவனை மேலும் கீழுமாக பார்த்து விட்டு சாரு விலக முயல... பிரதீப் அவளை தடுத்து "ஏய் இரு... நா போய் coffee போட்டு எடுத்துட்டு வரேன்... Coffee powder and sugar மட்டும் எங்க இருக்குனு சொல்லு..."என்று கேட்க...

தாரணி சொல்ல... பிரதீப் உள்ளே சென்றான்...

Coffee போடும் சாக்கில் அரை‌மணி நேரத்தை கழித்து கொண்டு நாலு cup coffee போட்டு ஒரு cup வைத்து மூன்று cup ஐ மட்டும் எடுத்து கொண்டு வெளியே வந்தான்...

பிரதீப் தாரணி முன் coffee ஐ நீட்ட... 

"ஏன் டா ஒரு coffee போட இவ்ளோ நேரமா டா... இந்த நேரத்துல பாதி சமையல் கூட செஞ்சு முடிச்சுடலாம்..."

"சொல்லுவ மா... உங்கள மாதிரி என்ன experience ஹ இருக்கு... நாங்களே எப்போதாவது ஒரு தடவ தான் அந்த kitchen குள்ள போறோம்..."

"ரொம்ப பெருமையா இருக்கு..."

"Coffee வேணாம் னா கொடுத்துடு... ரொம்ப பேசாத..."

அவள் காதில் வாங்காமல் குடித்தாள்...சாரு சோகமாகவே இருக்க...

பிரதீப் coffee குடித்து கொண்டே "ப்ச் சாரு... குடி மா... ஒன்னு ஆக போறது இல்ல..."

"நானே பயந்து பயந்து தான் டா இந்த coffee ஹ குடிக்கிறேன்...அவளை ஏன் டா compal பண்ற..."

"உன்னைய கொல்ல போறேன்... பேசாம இருக்க மாட்ட... எவ்ளோ serious ஹ பேசிக்கிட்டு இருக்கேன்..."என்று பிரதீப் கடுப்பாக...

"டேய் அடங்கு... உனக்கு இப்ப தானே விசயமே தெரியும்... ஆனா நா கூடவே இருந்து பாத்தேன்... எல்லாம் எனக்கு தெரியும்..."

பிரதீப் பல்லை கடித்து "பைத்தியம்..."என்று அவளை இழுத்து கொண்டு தனியாக வந்தான்...

"டேய் கைய விடு டா..."என்று அவள் கத்த...

அவன் காதில் வாங்காமல் ஒரு அறைக்குள் அழைத்து சென்று "அறிவு இருக்கா... எல்லாம் தெரியும் பித்துற... அவங்க காதலிச்சாங்க தான்... அது உனக்கு தெரியும் தான்... நா இல்ல னு சொல்லல... ஆனா நீங்க பாத்த அஸ்வின் வேற... இந்த அஸ்வின் வேற... அது தான் உண்மை..."

"ஏய் ச்சீ வாய மூடு... உனக்கு என்ன டா தெரியும் அஸ்வினை பத்தி...முத நீ அவனை‌ பாத்து இருக்கீயா..."

"ஏ ஆமா... நா அவனை பார்த்து கூட இல்ல தான்... ஆனா ஒருத்தன் பேசுறத வச்சே... அவன் யாரு எப்படி னு easy நா கண்டு பிடிச்சுடுவேன்... நீங்க ஆனா ஊனா ஒரு dialogue பேசுவீங்களே... ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு தான் தெரியும்னு... அதே மாதிரி தான் இதுவும்... ஒரு பையனை பத்தி இன்னொரு பையனுக்கு தான் தெரியும்... 

          நீயும் சாருவும் ரொம்ப நாளுக்கு அப்புறம் அஸ்வினை பாத்திங்க... உண்மை தான்... அவனை பாத்த சந்தோஷத்துல அவன் பேசுன emotional dialogue மட்டும் தான் உங்களுக்கு தெரிஞ்சுச்சு..‌ ஆனா அவன் எப்படி பேசுறான் னு தான் நீங்க புரிஞ்சுக்கல... அவன் பேசுன வரைக்கும் அவனோட சுயநலத்துக்காக மட்டும் தான் பேசு இருக்கான்...

   ரெண்டு பேரும் காதலிச்சாங்க சரி... அவனுக்கு accident ஆச்சு சரி... பழசு எல்லாம் மறந்தான் சரி... கல்யாணம் ஆகிடுச்சு சரி... எதுக்கு தேவையே இல்லாம இப்ப இப்படி ஒரு video... இல்ல நா தெரியாம தான் கேட்குறேன்... என்ன Try பண்றான்..."

"டேய் லூசு... இது தான் டா உண்மையான காதல்..."

"மண்ணாங்கட்டி...அடியே பைத்தியமே... அவன் எதுக்கு இந்த video போட்டான் னு யோசிச்சியா இல்லையா..."

தாரணி ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் தாடையில் வைத்து தேய்த்தவாறு "ஆமா எதுக்கு..."என்று இவனிடமே கேட்க...

"அப்படியே குத்துனேனா.."என்று கையை மடக்கி ஓங்க...

"நா பாவம் ல..."

பிரதீப் ஏதோ சொல்ல வாய் திறக்க...

"Censor cut..."

"த்து...பைத்தியம்... யோசி டி... மூளை இருக்கு ல... கசக்கி பாரு...ஏதோ ஒன்னு இடிக்கல... Why all this டி... எல்லாம் lovers சொல்ற மாதிரி எங்கிருந்தாலும் வாழ்க னு பாடிட்டு போக வேண்டியது தானே... எதுக்காக இவ்ளோ விளக்கம்... Again ரெண்டு பேரும் சேர போறங்களா என்ன... அவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு... இவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு... இனிமே ஒன்னுமே பண்ண முடியாது..."

"மூதேவி..."

" சொல்லு ஸ்ரீதேவி..."

"Rhyming எல்லாம் நல்லா தான் இருக்கு... இவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு னு அவனுக்கு தெரியாது தானே... அவன் இவ அவனுக்காக காத்துக்கிட்டு இருக்கா னு தானே நினைச்சுக்கிட்டு இருக்கான்... அப்புறம் எப்படி டா..."

"போதும்... நீ தெளிவா தான்‌ பேசுற..."

"நா என்னைக்குமே தெளிவு தான் டா... உனக்கு தான் டா கலங்கி போச்சு..."

"அடங்கு... இவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு னு அவனுக்கு தெரியாது தான்... ஆனா அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு னு அவனுக்கு தெரியும் தானே... கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் எதுக்காக இவளை தேடிக்கிட்டு இருக்கான்... இந்த தேடல் அவளுக்கானது நீ நினைக்கிறீயா... நீ அப்படி தான் நினைப்ப... ஆனா நா அப்படி நினைக்கல... நினைக்கவும் தோணல..."

"அவங்க ரெண்டு பேரும் காதலிச்சாங்க டா..."

"ஆஹான்... நீயே சொல்ற பாத்தியா... காதலிச்சாங்க... அது தான் உண்மை...காதலிச்சாங்க... அவ்ளோ தான்... ஆனா இப்ப இல்லையே..."

"உண்மை தான் டா... அவங்க ரெண்டு பேரும் ஒன்னா இல்ல... இருந்தாலும் அவங்க மனசுல அந்த காதல் இருக்கும்..."

"இருக்கும்..."என்று அவன் அழுத்தி சொல்லி "சாரு மனசுல இருக்கு... ஆனா அவன் அந்த அஸ்வின் மனசுல இல்ல தாரணி... அவன் பேசுற விதத்திலேயே தெரியுது..."

"அச்சோ..."என்று தலையில் கை வைத்து  "ஏன் டா இப்படி என்னைய குழப்புற... என்ன தான் டா சொல்ல வர... புரியும் மாதிரி சொல்லு..."

பிரதீப் தாரணி இரு தோள்பட்டையையும் பிடித்து அவளை சிறிது நெருங்கி "அஸ்வின் இவ்வளவு பேசுனது சாருவுக்கு னு நினைச்சா அது தான் இல்ல... அவனோட கண்ணீர் துளி கூட சாருவுக்கு இல்ல..."

"நீ என்ன உலர்ற பிரதீப்... அவன் அவளை நினைச்சு தார் இவ்ளோ feel பண்ணி பேசிட்டு இருக்கான்... நீ என்னடான்னா அவளுக்காக இல்ல னு சொல்ற..."

"அது தான் உண்மை..."

"அட போ டா..."என்று நகர போனவளை "ஏ... இரு டி..."என்று கத்தியவாறு அவளை பிடித்து இழுத்து நிற்க வைக்க..

"தாரணி நா சொல்றது உனக்கு புரியுதா இல்ல... அவன் இவ்வளவும் பண்றது சாருவுக்காக இல்ல... அவனோட wife தர்ஷினிக்காக... போதுமா..."

தாரணி அசையாமல் அவனையே பார்த்தாள்...

"நா எதுக்காக சொல்றேன் புரிஞ்சுக்கோங்க... தயவுசெய்து சாரு கிட்ட பேசி அந்த நினைப்பும் இருந்து அவளை வெளியே கொண்டு வா... இத நினைச்சா feel பண்ணி ஒன்னும் ஆக போறது இல்ல... அவ்ளோ தான் சொல்லுவேன்..."

"உனக்கு எப்படி தெரியும்... அஸ்வின் அவனோட wife காக இது எல்லாம் பண்றான் னு..."

பிரதீப் அமைதியாக...

"இவ்ளோ நேரம் பேசுனீயே டா... இப்ப பேசு... உனக்கு எப்படி தெரியும்..."

"அது... அது வந்து... அது தான் நா முதவே சொன்னேன் ல... ஒரு ஆணோட மனசு இன்னொரு ஆணுக்கு தான் தெரியும் னு... அப்படி தான்‌‌..."

"சும்மா அடிச்சு விடாத டா... உண்மைய சொல்லு... உனக்கு அஸ்வினை தெரியுமா..."

பிரதீப் திருதிருவென விழித்தவாறு "இல்லையா..."என்றிட

"மரியாதையா உண்மைய சொல்லு பிரதீப்... உனக்கு அஸ்வின் ஹ நல்லா தெரியும் தானே..."

"நா தான் இல்ல னு சொல்றேன் ல..."

"பொய்..."

"இல்ல..."

"ஆமா..."

"Proof..."

"அது நீ தான்..."

"அச்சோ தாரணி... ஏதோ police investigation மாதிரி இருக்கு... நம்ம normal பேசலாமே..."

"நீ தான் அப்படி பேசுற... நா இல்ல... நீ உண்மைய தெரிஞ்சதுல இருந்தே இப்படி பண்ற... I mean சந்தேகத்தோட..."

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை..."

"அப்புறம் ஏன் இப்படி பண்ற னு சொல்லு... அதாவது எதுக்காக அஸ்வினை பொய்யா நடிக்கறான்னு சொல்ற..."

"அவனோட பேசுலேயே தெரியுது தாரணி..."

"என்ன தெரியுது..."

"அவன் பொய் சொல்றான்னு..."

"அது தான் எப்படி..."

"அது அப்படி தான்..."

"you are lying..."

"I am not lying..." 

"Then tell me.."

"Nothing like that..."

"There is something..."

"No..."

"Yes..."

பிரதீப் தலையை பிடித்து கொண்டு "ஆமா... எனக்கு தெரியும்... எல்லாமே தெரியும்... ஆனா அது நீங்களா I mean அது சாருவா இருப்பா னு எனக்கு சுத்தமா தெரியாது...நா எதிர்ப்பார்க்கவும் இல்ல... அது யாரோ னு நினைச்சேன்..‌ ஆனா அது சாரு நீ சொன்னதும் I was shocked..."

Calling bell அடிக்க... இருவரும் திரும்பி பார்த்தனர்...

தொடரும்...

# nancy