சொல்லாமல் யார் பார்த்தது - 5

3 பேரும் வீட்டுக்கு வந்ததும்...

வசந்தி : என்னங்க..கால் நொண்டி நடக்குறீங்க.

ப்ரீத்தி : ஹாஸ்பிடல் வெளியே வரும் போது இடிச்சுக்கிட்டாரு மா.

வசந்தி : அடக்கடவுளே!! இது என்ன நேரமோ..சரி வாங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.

சத்யா : அண்ணா ?? என்ன இது..

அஸ்வின் : இடிச்சுக்கிட்டாரு மா.

சத்யா : ஹாஸ்பிடல் கிட்ட தானே இடிச்ச.. அப்படியே பாத்துட்டு வர வேண்டியது தானே.

தியாகு : அதுல அவசியம் இல்ல மா. சின்ன அடி தா..சரி ஆகிடும்.

சத்யா : ஆமா...எப்ப பாரு இப்படியே சொல்லு..சரி போய் கொஞ்ச நேரம் காலை நீட்டி படு..ஹே..பசங்களா வாங்க நம்ம வீட்டுக்கு... இடியாப்பம் சாப்பிடலாம். அண்ணா உனக்கு நான் வசந்தி கிட்ட கொடுத்துவிடுறேன்.

தியாகு : சரி மா..

வசந்தி சத்யா ரெண்டு பேரும் இடியாப்பம் இட்லி சட்டில ஊத்திட்டு தேங்காய் பால் எடுக்குறாங்க.

இடியாப்பம் பிழியும் போது திவ்யா, பூஜா, வசந்த் போட்டி போட்டு பண்றாங்க.

ஹால்ல அஸ்வினும் ப்ரீத்தியும் இருக்காங்க.

ரெண்டு பேரும் பேசாம தலையை குனிஞ்சுட்டு இருக்காங்க.

ப்ரீத்தி மெல்ல அவனை பாத்துட்டு குனிஞ்சுக்குறா..

அவ பாக்காத நேரம் அஸ்வின் பாக்குறான்..

ப்ரீத்தி : ச்ச.. பாவம்..அவரு ஒன்னும் வேணும்னே பண்ணலை.. நான் தா பாவம் திட்டிட்டேன்..ன்னு யோசிச்சுட்டு..

மாமா.. சாரி!! உங்க மேல எந்த தப்பும் இல்ல.. நான் தா தேவை இல்லாம உங்களை கஷ்டப்படுத்திட்டேன்.

அஸ்வின் : ஹாப்பா... நான் கூட இன்னும் கோவமா இருக்கீயோன்னு நினைச்சுட்டே...

ப்ரீத்தி : கோவம்லா இல்ல..

அஸ்வின் : ம்ம்..அது போதும்.

அந்த டைம் சத்யா ஓட அக்கா வீட்டுக்கு வராங்க..

அஸ்வின்: வாங்க பெரியம்மா...அம்மா பெரியம்மா வந்து இருக்காங்க.

பெரியம்மா ( பாரதி): நல்லா இருக்கேன்..நீ எப்படி இருக்க..

ப்ரீத்தி : வாங்க அத்தை

பாரதி : எப்படி வளர்ந்துட்ட... நாளைக்கே கல்யாணம் பண்ணலாம் போல இருக்கே...

ப்ரீத்தி திருதிருன்னு முழிக்குறா..

அஸ்வின்க்கு முகம் சின்னதா போகுது.

சத்யா : அக்கா..வா எப்படி இருக்க..

பாரதி : நல்லா இருக்கேன்..

வசந்தி : வாங்க அண்ணி..

பாரதி: நீயும் இங்க தான் இருக்கீயா.. உன்னை தான் முக்கியமா பாக்க வந்தேன்...

வசந்தி : என்ன அண்ணி..

ப்ரீத்தி தண்ணி கொண்டு வந்து கொடுக்குறா..

பாரதி : எல்லாம் நல்ல விஷயம் தான்..
எங்க ஊருல நம்ம ஆளுங்க தான்..நல்ல குடும்பம்..பொண்ணு பாத்துட்டு இருக்காங்க..அதா நம்ம ப்ரீத்திக்கு சொல்லலாம் ன்னு.. வந்தேன்.

சத்யா : ஒரு நிமிஷம் கா.. ப்ரீத்தி நீ உள்ள போய் ரெஸ்ட் எடு.. நீயும் போ டா..

ரெண்டு பேரும் போறாங்க..

வசந்தி : அவ இப்போ தா அண்ணி 12 வது முடிச்சு இருக்கா...

சத்யா : ஆமா கா..அண்ணா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு..

பாரதி : நான் பேசிக்குறேன்.. அவன் கிட்ட..

வசந்தி சத்யா ரெண்டு பேருக்கும் அதுல விருப்பம் இல்ல..

ப்ரீத்தி : உங்க பெரியம்மா க்கு அறிவே இல்லையா..

அஸ்வின் : உங்க அத்தை தானே.. அப்படி தானே இருப்பாங்க.

ப்ரீத்தி : அவ்வளவு தானா...இனி காலேஜ் ல போக முடியாதா... கல்யாணம் குழந்தை அவ்வளவு தானா..ஸ்சோ... நானும் காலேஜ் போலாம்.. சைட் அடிக்கலாம்..எனக்குன்னு பாய் ப்ரண்ட்ஸ்ல கிடைப்பாங்கன்னு நினைச்சேன்னே... எல்லாம் போச்சா..

அஸ்வின் : அடி பாவி...

ப்ரீத்தி : ஏன் மாமா ?? அவங்க அவங்க கஷ்டம் அவங்க அவங்களுக்கு...உனக்கு என்ன ஜாலியா காலேஜ் போவ... யாரையாவது லவ் பண்ணுவ...யாரு கண்டா இப்பவே கூட கரெக்ட் பண்ணி கூட இருப்ப..எனக்கு பாரு... இன்னும் ஒரு ஆளு கூட இல்ல..லவ் பண்ணி கல்யாணம் பண்ணலாம் ன்னு இருந்தேன்னே...இப்ப எல்லாமே கெட்டு போச்சு.

அஸ்வின் : ஏய்...நீயா ஏதாவது கற்பனை பண்ணிட்டு பேசாதே..நேத்து தானே சொன்னேன்.. நான் யாரையும் சைட் அடிக்கல.. உன்னை தவிர..

ப்ரீத்தி டக்குன்னு அவனையே பாக்குறா..

அஸ்வின் : இதுவரைக்கும் லவ்வும் பண்ணது இல்ல..ஆனா உன்மேல ஏதோ...

ப்ரீத்தி : ஏதோனா...

அஸ்வின் : லவ்...

ப்ரீத்தி : என்ன இப்படி சொல்றீங்க..

அஸ்வின் : ஏன் நான் உன்னை லவ் பண்ண கூடாதா..

ப்ரீத்தி : ப்ராப்போஸ் பண்ணுங்க..

அஸ்வின் : ஐ லவ் யூ..

ப்ரீத்தி : வேற மாதிரி..ஐ வான்ட் மோர்..

அஸ்வின் : ஹே..விளையாடதா... நீயும் லவ் பண்றீயா..

ப்ரீத்தி : அப்பறம் யோசிச்சு சொல்றேன் ஓகே வா.

அஸ்வின் : சரி.. வைட் பண்றேன். சீக்கிரம் சொல்லு..

ப்ரீத்தி : ம்ம்..

தொடரும்..

#  Bhuvi